
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியாக வலம் வருபவர் கபிலன். சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் கபிலன், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தூரிகை கபிலன் ‘பீயிங் வுமன்’ (Being Women Magazine ) எனும் இதழையும், ’தி லேபிள் கீரா’ (the label keera) எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.